நேபாள எல்லையில் ரூ.159 கோடியில் பாலம் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய-நேபாள எல்லையில் உள்ள மேச்சி ஆற்றின் குறுக்கே ரூ.159 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்காக, நேபாளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல்

இந்திய-நேபாள எல்லையில் உள்ள மேச்சி ஆற்றின் குறுக்கே ரூ.159 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்காக, நேபாளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மேச்சி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கவும், அதற்கான செலவினைப் பகிர்ந்து கொள்ளவும், இந்தியா- நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பாலத்தை ரூ.158.65 கோடி செலவில் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை, ஆசிய வளர்ச்சி வங்கி மூலமாக, மத்திய அரசு வழங்கும்.
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (என்எச்ஐடிசிஎல்), இந்தத் திட்டத்தை நிறைவேற்றும். நேபாளத்தின் மேச்சி நகரில் உள்ள காகர்விட்டா- மேற்கு வங்கத்தில் உள்ள பனிதாங்கி புறவழிச் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், 1,500 மீட்டர் நீளத்திலும், 6 வழிப் பாதைகளுடன் இந்தப் புதிய பாலம் இருக்கும்.
புதிய பாலம் கட்டுவதால், இரு நாடுகளுக்கு இடையேயான பிராந்தியத் தொடர்புகள் அதிகரிக்கும். மேலும், இரு நாடுகளுக்கு இடையே தொழில் துறை வளர்ச்சி, சமூக, கலாசார பரிமாற்றங்கள் மேலும் வலுவடைவதால், இரு நாட்டு நல்லுறவு மேம்படும்.
நேபாள அரசின் ஆலோசனையுடன் இந்தப் புதிய பாலக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com