விரைவில் வெளியாகிறது புதிய ரூ.200 நோட்டு: மத்திய அரசு அறிவிப்பு

புதிய ரூ.200 நோட்டினை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்துக்கு கொண்டுவரும் என்று மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ரூ.200 நோட்டினை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்துக்கு கொண்டுவரும் என்று மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ரூ.2,000 நோட்டுக்கான சில்லறைத் தட்டுப்பாடு வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பணப்புழக்கம் குறைந்தது. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் கொண்டுவரப்பட்டாலும், வழக்கமான பணப் புழக்கம் இல்லை.
இதையடுத்து புதிதாக ரூ.200 நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த மார்ச் மாதத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, புதிதாக ரூ.50 நோட்டுகளை அறிமுகப்படுவதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்துக்குக் கொண்டு வரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால் நாட்டின் பணப் புழக்கப் பிரச்னை முழுமையாக நீங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com