ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மண்டல்கார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ கிர்தி குமாரி, பன்றிக் காய்ச்சலால் இன்று காலை உயிரிழந்தார்.
50 வயதாகும் கிர்தி குமாரிக்கு நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மின் சிங் மருத்துவமனையிலும், பிறகு அங்கிருந்து போர்டீஸ் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
அவருக்கு 12 மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கிர்தி, வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டதால், வீட்டுக்கு மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தும் குணம் அடையவில்லை. இறுதியில் உடல்நிலை மிக மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பயனில்லாமல் போனது என்றார் அவரது சகோதரர் போஜ்ராஜ்.