புதுதில்லி: பிரதமர் மோடி 'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டு கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:
ஏன் பிரதமர் மோடி 'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டுள்ளார்? ஏன் இத்தனை மன அழுத்தத்தில் இருக்கிறார்? அக்கட்சியின் ஊழல் பேர்வழிகளோடு அவருக்குள்ள நெருக்கம் அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் அதே நேரம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஷோரி, யஸ்வந்த் சின்ஹா மற்றும் சத்தருகன் சின்ஹா ஆகியோரின் கேள்விகளுக்குஅவர் எப்போது பதில் அளிக்கப் போகிறார்?
அதேபோல் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி,முரளி மனோஹர் ஜோஷி ஆகியோருக்கு எதிராக அவரும், அமித் ஷாவும் சேர்ந்து செய்த சதிகளைக் குறித்தும் அவர் வெளிப்டையாகப் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.