எல்லையில் பனிச்சரிவு: 5 ராணுவ வீரர்கள் மாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இரு பகுதிகளில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இரு பகுதிகளில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழையுடன் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய குரெஸ், நவ்காம் பகுதிகளில் பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குப்வாரா மாவட்டம், நவ்காம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகினர். இதேபோல, பந்திபோரா மாவட்டம், குரெஸ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 2 வீரர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com