சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி

கர்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.

கர்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கர்நாடக மாநிலம், ஹொன்னாவரில் ஏற்பட்ட கலவரம் குறித்து மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை அரசியலாக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com