கர்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கர்நாடக மாநிலம், ஹொன்னாவரில் ஏற்பட்ட கலவரம் குறித்து மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை அரசியலாக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.