அகமதாபாத்: குஜராத்தில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை நான்கு மணி நிலவரப்படி 68.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 89 தொகுதிகளுக்கு கடந்த 9–ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 66.75% வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்ககான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் வாக்சுப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவானது மாலை 5 மணிவரை நடைபெற்றது.
இறுதி நிலவரப்படி 68.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.