குஜராத்தில் 6 மையங்களுக்கு நாளை மறுவாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் நடந்து முடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 மையங்களுக்கு மீண்டும் நாளை தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
குஜராத்தில் 6 மையங்களுக்கு நாளை மறுவாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வருகிற 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 6 மையங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது:

குஜராத் தேர்தலின் போது 6 மையங்களில் நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இங்குள்ள இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளை நீக்க அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் மறந்துவிட்டனர். எனவே இங்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 

இதையடுத்து டிசம்பர் 17-ந் தேதி (நாளை) இம்மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டுள்ளோம். கவனக்குறைவாக செயல்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com