கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது: உபியில் விநோத சம்பவம்! 

உத்தரப் பிரதேசத்தில் கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது செய்யப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது: உபியில் விநோத சம்பவம்! 

முஸாபார்நகர்: உத்தரப் பிரதேசத்தில் கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது செய்யப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாபார்நகர் மாவட்டம் காக்டா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று ஜோதி தனது கணவன் இல்லத்தில் இருந்து, ரூ.70000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிக் கொண்டு  வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.       

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஜோதியை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஜோதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏமாற்றுதல் மற்றும் திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com