காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் அவரது தலைமையில் முதல் காங்கிரஸ் உறுப்பினர் கூட்டம் தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், பேசியதாவது:
குஜராத் வளர்ச்சி என்பது வெறும் மோடி வித்தை. இதை நான் குஜராத் சென்றபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் கூறுவது போன்று இத்தனை ஆண்டு பாஜக ஆட்சியில் அங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
குஜராத் வளர்ச்சி என்பதெல்லாம் சுத்தப் பொய். இதை நீங்களும் நேரில் சென்றால் தெரிந்துகொள்ளலாம். வளர்ச்சி என்ற பெயரில் தங்களின் உழைப்பு திருடப்பட்டுள்ளதாக குஜராத் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
தனிநபரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் இருப்புத்தொகை அளிப்பது, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற அனைத்தும் பொய்.
2ஜி விவகாரத்தின் உண்மைத் தன்மை எங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அது தற்போது தீர்ப்பாக வெளியாகி மக்களுக்கு தெரியவந்துள்ளது என்றார்.