புதுதில்லி: அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அரசியல் கட்சிகள் நன்கொடைபெறுவது அவர் தெரிவித்ததாவது:
* அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ. 2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம்.
* இந்த கட்டுப்பாடு முதலில் ரூ.20 ஆயிரமாக இருந்தது.
* ஆனால் அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் முறைகளில் நிதி பெறுவதற்கு தடை இல்லை.
* ஆனால் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் நிதி பெறுபவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
* அரசியல் கட்சிகள் தகுந்த காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.