மும்பை விமான நிலையத்தில் பேண்ட் பாக்கெட்டில் 2.1 கிலோ தங்கம் கடத்திய நபர் கைது! 

மும்பை விமான நிலையத்தில் 2.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை விமான நிலையத்தில் 2.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்க கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மும்பை விமான நிலையம் வந்த அகமது சிராஜ் என்பரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 2.1 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து 63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com