மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாஜகவினர் அல்ல என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி பாகிஸ்தான் உளவாளிகளாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுடன் பாஜ தலைவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலப் பிரிவு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.