கட்சி உடைய விட மாட்டேன்: முலாயம் சிங் சூளுரை!

கடின உழைப்பால் உருவான சமாஜவாதி  கட்சி உடைய விட மாட்டேன் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் சூளுரைத்துள்ளார்.
கட்சி உடைய விட மாட்டேன்: முலாயம் சிங் சூளுரை!

லக்னோ: கடின உழைப்பால் உருவான சமாஜவாதி  கட்சி உடைய விட மாட்டேன் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் சூளுரைத்துள்ளார்.

முலாயம்சிங்கின் மகனும் , உத்தரபிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் முலாயம் சிங் யாதவ் இன்று அவருடைய ஆதரவாளர்களிடம் பேசினார். அப்பொழுதுஅவர் கூறியதாவது;

கட்சி இரண்டாக உடைவதை தடுப்பதற்காகவே நன் தில்லி சென்றேன். உங்களுக்காக நான் வேறு என்ன செயய் இயலும்? நமது கடின உழைப்பில் உருவான இந்த கட்சி மீதான உங்கள் அக்கறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எந்த புதுக்கட்சியையும் தொடங்கப் போவதில்லை. அதே போல் கட்சி சின்னமான சைக்கிளை யும் மாற்றப் போவதில்லை.

அகிலேஷ் தலைமையிலான கட்சியின் பிரிவானது 'அகில பாரதீய சமாஜவாதி கட்சி' என்ற புதிய பெயரையும், மோட்டார் சைக்கிள் சின்னத்தையம் தேர்தல் ஆணையத்திடம் கோரியிருப்பதாகத் தெரிவித்த முலாயம், அக்கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

கட்சியின் பிளவுக்கு காரணமான ராம் கோபால் யாதவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர் இந்த கட்சி உடைய வேண்டுமென்று விரும்புபவர்கள் எதிர்கட்சித் தலைவர்களையெல்லாம் சென்று சந்திக்கிறார்கள்; என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது.ஆனால் இந்த கட்சி உடைய நான் விட மாட்டேன் என்று அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com