ராணுவ தினம்: இந்திய ராணுவத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்

ராணுவ தினத்தையொட்டி, இந்திய ராணுவ வீரர்களின் வீரம், ஈடு இணையில்லா சேவைக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராணுவ தினம்: இந்திய ராணுவத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்

ராணுவ தினத்தையொட்டி, இந்திய ராணுவ வீரர்களின் வீரம், ஈடு இணையில்லா சேவைக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ராணுவ தினத்தில் ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள். இந்திய ராணுவ வீரர்களின் வீரம், ஈடு இணையில்லாத சேவைகளுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.
நாட்டின் இறையாண்மையை காப்பதானாலும் சரி அல்லது பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவி செய்வது என்றாலும் சரி, ராணுவமே எப்போதும் முதலாவதாக உள்ளது. இன்றைய தினத்தில் நமது ராணுவத்தின் தியாகத்தை பெருமையுடன் நினைவு கூர்கிறோம். 125 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்வதற்காக, தங்களது வாழ்க்கையை அவர்கள் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்று சுட்டுரை பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1949-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 15ஆம் தேதியன்றுதான், பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ராணுவத் தலைமைத் தளபதி பதவியை லெப்டினென்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா பெற்றுக் கொண்டார். இந்த தினம், ஆண்டுதோறும் ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com