தில்லி, ஜார்க்கண்ட் பேரவையில் ஜெயலலிதாவுக்கு இரங்கல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அண்மையில் காலமான புகழ்பெற்ற தலைவர்களுக்கு தில்லி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அண்மையில் காலமான புகழ்பெற்ற தலைவர்களுக்கு தில்லி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தில்லி சட்டப்பேரவை அலுவல்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதும், "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு, இந்த அவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது' என்ற இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் வாசித்தார். மேலும், தில்லி பேரவை முன்னாள் உறுப்பினர் ஹரி கிஷனின் மறைவுக்கும், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று, மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஜார்க்கண்ட் பேரவையில்..: இதேபோல, ஜார்க்கண்ட் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கும் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com