காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்திய பிரதமர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, சீனாவுடனான எல்லை பிரச்னையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன் பூட்டான் அருகே டோக்லாம் பகுதியில் நெடுநாட்களாக நிலவும் பதற்றத்திற்கு தீர்வு கண்டு இந்திய மக்களிடையே இருக்கும் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.