மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருப்பதை கண்டறியும் புதிய கருவியை அம்மாநில அரசு காவல் துறைக்கு வழங்கவுள்ளது.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஆங்காங்கே மாட்டிறைச்சி வைத்திரப்பதாக கூறி தாக்குதல்களும் நடந்தவாரே உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திரப்பதை கண்டறியும் கருவி ஒன்றை அம்மாநில அரசு வடிவமைத்துள்ளது. இந்த கருவியின் உதவியால் 30 நிமிடத்தில் அது மாட்டிறைச்சியா என்பதை காவலர்களால் கண்டறிய முடியும். இந்த கருவி விரைவில் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.