புது தில்லி: வருங்காலத்தில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, விரைவில் சொத்துக்களை வாங்க, விற்க ஆதார் கட்டாயமாக்கப்படும். ஆதார் கட்டாயமாக்கப்படுவதால் சொத்துக்களை வாங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் தீரும்.
கைரேகைகள் பதிவு செய்யப்படுவதால் சொத்துக்கள் அல்லது மனைகளை வாங்கும் போது ஏற்படும் சிக்கல்கள் தீரும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.