ஹோட்டல் அறையில் 19 வயது எம்பிபிஎஸ் மாணவியுடன் 18 வயது இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

தில்லியில் ஹோட்டல் அறையில் எம்.பி.பி.எஸ். மாணவியுடன் இணைந்து 18 வயது இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது
ஹோட்டல் அறையில் 19 வயது எம்பிபிஎஸ் மாணவியுடன் 18 வயது இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை


புதுதில்லி: தில்லியில் ஹோட்டல் அறையில் எம்.பி.பி.எஸ். மாணவியுடன் இணைந்து 18 வயது இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார் ஒரு மாணவி (19). இவரது தந்தை ரோஹினி பகுதியில் உள்ள துணை ராணுவப் படையில் ஆப்பரேட்டராக வேலைபார்த்து வருகிறார்.

அந்த மாணவியுடன் இணைந்து ஜனக்பூரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (18). இவரது தந்தை பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இளைஞர் தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இருவரும் இணைந்து தென்மேற்கு தில்லியின் துவாராகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணி வரை மட்டுமே அவர்கள் ரூம் வாடைகைக்கு எடுத்திருந்த நிலையில், 3 மணி ஆகியும், அவர்கள் வராததால், ஹோட்டல் ஊழியர் அறையை தொடர்ந்து தட்டியுள்ளார்.

ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஹோட்டலுக்கு விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மின்விசிறியில்  பெட்சீட்டை கட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதன் பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இருவரது தற்கொலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை காதல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com