குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியதவாது:
எண்ணிக்கை அடிப்படையில் நாம் பின்தங்கி இருக்கலாம். ஆனாலும் போரிடாமல் வீழக்கூடாது. நம்முடைய வேட்பாளர்கள் மீரா குமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகிய இருவரும் தகுதியான வேட்பாளர்கள். ஆகவே அவர்களுக்கு நம் அனைவரின் ஆதரவும் மிக அவசியம்.
குறுகிய மனப்பான்மையும், மதவாத அரசியலையும் ஊக்குவிப்பவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நமது ஒற்றுமை இந்தத் தேர்தலில் வெளிப்பட வேண்டும்.
இந்தத் தேர்தலானது எதிர்காலத்துக்கான சுதந்திரப் போர். நமது செயல்களில், எண்ணங்களில் தெளிவும், தைரியமும், நம்பிக்கையும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும் என்றார்.