jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி?: எல்லையோர வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்கும் வருவாய்த் துறையினர்

By DIN  |   Published on : 18th July 2017 01:05 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய - பாகிஸ்தான் எல்லைகளிடையே சந்தேகத்துக்குரிய வகையில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு (என்ஐஏ) உதவும் வகையில் அவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மட்டுமன்றி நூதன முறையில் நிதி திரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு பாதாம் பருப்பு வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாதாம் பருப்பின் விலை ரூ.650 வரை இருக்கலாம். ஆனால், அவை ரூ.250-க்கு விற்கப்பட்டதாக ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற சில பொருள்களுக்கு அதிகப்படியான விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இத்தகைய சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளின் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து, இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் துணையுடன் இந்த விவகாரங்களை விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, சில வழக்குகள் மீதான விசாரணையை வருவாய்த் துறை அதிகாரிகளும், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்க கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளை நியமிக்கப் போவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரும்பாலும் காஷ்மீர் பிரிவினைவாதிகளே இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்