மணிப்பூர் தலைநகர் இம்பாலில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
அங்குள்ள சொய்பாம் லெய்கி பகுதியில்அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் காலை 10.50 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.