பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிறுபான்மையின மக்கள் குறித்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்காததை எதிர்த்து இன்று மதியம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அப்போது பேசிய அவர், தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், இதனை எதிர்த்து நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று மாலை தனது பதவியை மாயாவதி ராஜினாமா செய்துள்ளார்.