கேனிங்: மேற்கு வங்காள மாநிலம் கோச்சுபெரியா பகுதியில் இருந்து கடந்த வாரம் விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு ஜம்புதீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் படகில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர்களால் அந்த இடத்தைவிட்டு படகை நகர்த்த முடியவில்லை.
இதுபற்றி கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்ததும், கடலோர காவல்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 15 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
கடலில் தத்தளித்த மீனவர்கள், உதவி கேட்டு சிக்னல் அனுப்ப முடிந்தது. இதனால், கடலோர காவல்படையினர் மற்றும் பிற மீனவர்கள் இணைந்து அவர்களை விரைவில் மீட்டனர். அவர்கள் நம்கானா பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.