விழாக்கோலம் பூண்ட ராம்நாத் கோவிந்த் இல்லம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லம் வியாழக்கிழமை விழாக்கோலம் பூண்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லம் வியாழக்கிழமை விழாக்கோலம் பூண்டது.
கான்பூர் மாவட்டத்தின் கல்யாண்பூரில் உள்ள மகரிஷி தயானந்த் விஹார் காலனியில் உள்ள ராம்நாத் கோவிந்தின் இல்லத்துக்கு காலை 7 மணி முதலே உறவினர்களும், அண்டை வீட்டாரும் குவியத் தொடங்கினர். தேர்தல் முடிவு மாலையில் அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், இனிப்புகள் வழங்கியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் வெற்றியைக் கொண்டாடினர். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் ஒரு சேர அளிக்கிறது என்று உள்ளூர் மாநராட்சி மேயர் ஒருவர் கூறினார். ''இது, எங்களுக்கு தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைத் திருநாள்'' என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன்னரே வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டதாக மற்றொரு மாநகராட்சி மேயர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com