உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு,
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி 

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் மாநிலங்களின் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும், மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com