போதைப் பொருள் விவகாரம்: நடிகர் நவ்தீப்பிடம் எஸ்ஐடி இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப்பிடம் தெலங்கானா கலால்துறை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) திங்கள்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
போதைப் பொருள் விவகாரம்: நடிகர் நவ்தீப்பிடம் எஸ்ஐடி இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப்பிடம் தெலங்கானா கலால்துறை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) திங்கள்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி, தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள் ஏராளமானோருக்கு எஸ்ஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதில் நவ்தீப்புக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதையேற்று, ஹைதராபாதில் உள்ள தெலங்கானா கலால் மற்றும் கட்டுப்பாட்டு துறை எஸ்ஐடி முன்பு நவ்தீப் திங்கள்கிழமை ஆஜராகவுள்ளார். அவரிடம், போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எஸ்ஐடி அதிகாரிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் "அறிந்தும் அறியாமலும்", "ஏகன்" உள்ளிட்ட படங்களில் நவ்தீப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் திரைப்படத் தயாரிப்பாளர் புரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, பிரபல நடிகர் தருண், குணச்சித்திர நடிகர் பி. சுப்பா ராஜு உள்ளிட்டோரிடமும் எஸ்ஐடி குழுவினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com