மும்பையில் 4 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்: மீட்பு பணிகள் தீவிரம்

மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.
மும்பையில் 4 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்: மீட்பு பணிகள் தீவிரம்


மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பையின் காட்கோபர் தாமோதர் பூங்கா, லால் பகதூர் சாஸ்திரி சாலை பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்று இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 40க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒன்பது பேர் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com