புது தில்லி: தில்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி, நீட் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வு குறித்த தமிழக மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவது தொடர்பான விவகாரத்தை பழனிசாமி வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.