விசாகப்பட்டினத்தில் மனித கை வடிவத்தில் ஒரு கொய்யா காய்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஹூக்கும் பேட்டையைச் சேர்ந்த விவசாயி சத்யராவ் தன் வீட்டில் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு கொய்யா செடியை நட்டு வளர்த்து வந்தார்.
செடி நட்ட ஓராண்டுக்குள் அதில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவு காய்கள் காய்க்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்தாண்டு மரத்தில் காய்த்த மற்ற காய்களை காட்டிலும் ஒரு காய் மட்டும் வித்தியாசமாக மனித கை வடிவில் காய்த்தது.
இதுகுறித்து விவசாய ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட போது, 'செடி நடும் போது ஏற்படும் கால சூழ்நிலை மாற்றம் மற்றும் மரபணு மாற்றம் காரணமாக, இதுபோன்ற வித்தியாசமான வடிவில் காய்கள் காய்க்கிறது' என்றனர்.