ஊடுருவல் சதி முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டார் பகுதியில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருந்ததை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை கண்டறிந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் நெருங்கிச் சென்றபோது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதலில், பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் சதி முறியடிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார் அவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com