ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.148 கோடி சொத்துகள் முடக்கம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ.148 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.148 கோடி சொத்துகள் முடக்கம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ.148 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திர அரசின் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனால் பயனடைவதற்கு ஏதுவாக, ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான நிறுவனங்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ அமைப்பால் கடந்த 2004}ஆம் ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆந்திரத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ. 148 கோடி மதிப்புடைய சொத்துகளை (நிலம்) அமலாக்கத் துறை முடக்கியது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com