ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை திடீரென மோசமாக மாறியதால், ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை அவரசமாக வயலில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 3 பேரும் பத்திரமாக உள்ளனர் என்று காவல் துறை அதிகாரி கெளரிசங்கர் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது
அந்த ராணுவ விமானம், ஜெய்ப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வானிலை மோசமானது. அதையடுத்து, விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாததால், ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை அருகே, தயாரம்பூர் என்ற கிராமத்தில் வயலில் பகல் 12 மணிக்கு அந்த விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானத்துக்கும், அதில் வந்தவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்தக் காவல் துறை அதிகாரி கூறினார்.