ராணுவ விமானம் வயலில் தரையிறக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை திடீரென மோசமாக மாறியதால், ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை அவரசமாக வயலில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை திடீரென மோசமாக மாறியதால், ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமை அவரசமாக வயலில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 3 பேரும் பத்திரமாக உள்ளனர் என்று காவல் துறை அதிகாரி கெளரிசங்கர் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது
அந்த ராணுவ விமானம், ஜெய்ப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வானிலை மோசமானது. அதையடுத்து, விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாததால், ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை அருகே, தயாரம்பூர் என்ற கிராமத்தில் வயலில் பகல் 12 மணிக்கு அந்த விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானத்துக்கும், அதில் வந்தவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்தக் காவல் துறை அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com