பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் சித்தராமையா தலைமையிலான அரசு அமைய பாடுபடப் போவதாக பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.