புது தில்லி: இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுவை தாக்கல் செய்துள்ளது.
மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.