ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம், முண்டரோ கிராமத்தில் சிறுவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இந்நிலையில் மழை பெய்யவே அவர்கள் அனைவரும் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.