அஸ்ஸாம்: பேருந்தில் வெடிபொருள்கள் பறிமுதல்

அஸ்ஸாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் போலீஸாரின் சோதனையில் பேருந்திலிருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் போலீஸாரின் சோதனையில் பேருந்திலிருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக, போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது:
கச்சார் மாவட்டம், லக்கிபூரில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, மணிப்பூரிலிருந்து சில்சார் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம்.
இதில், பேருந்திலிருந்த 2 நபர்கள் வெடிபொருள்களைக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 30 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com