நட்சத்திர ஹோட்டல்களில் மீண்டும் மதுபான பார்: கேரள அரசு அறிவிப்பு

புதிய மதுபானக் கொள்கைக்கு கேரள அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 3, 4 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் மீண்டும் மதுபான பார்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய மதுபானக் கொள்கைக்கு கேரள அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 3, 4 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் மீண்டும் மதுபான பார்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பார்களில் நேரம் காலை 11 மணியில் இருந்து இரவு 11 வரை என மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா நகரங்களில் ஒரு மணி நேரம் முன்னதாக பார்களைத் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மது குடிப்பதற்கான வயது வரம்பு 21-இல் இருந்து 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இனிமேல் நட்சத்திர ஹோட்டல்களில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com