புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் 150, காரைக்கால் ஜிப்மரில் 50 என 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 1,89,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இங்குள்ள 200 இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 4-ஆம் தேதி 2 பிரிவாக நடைபெற்றது.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஒரு பிரிவாகவும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை ஒரு பிரிவாகவும் தேர்வு நடைபெற்றது.
அதன் தேர்வு முடிவுகள் இன்று www.jipmer.edu.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.