ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 8 மாடி கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கான மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 8 மாடிகள் கட்டடத்தின் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை எந்த சேதம் விவரமும் வெளியாகவில்லை.