லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங் துவக்கியது. ஆட்டத்தின் துவக்கம் முதல் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்தியா கடுமையாக போராடி வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.