ஹரியானாவில் பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம்

ஹரியானாவில் பெண்ணை காரில் கடத்திய கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை

ஹரியானாவில் பெண்ணை காரில் கடத்திய கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், சோஹ்னா பகுதியில் தனியாக நடந்து சென்றபோது, காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளது.

ஓடும் காரிலேயை வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்த மர்ம கும்பல், உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனை அருகே அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஹரியானா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com