புதுதில்லி: பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனது ஆளுநர் பொறுப்பை முறைப்படி ராஜிநாமா செய்தார்.
முறைப்படி தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குவங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, பிகார் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.