காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, பிரதமர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், ''ராகுல் காந்தி நலமுடன் நீண்ட ஆயுள் வாழ பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மம்தா பானர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில், ''ராகுல் காந்தி, மகிழ்ச்சியோடும், நலமுடனும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.