யோகா தின கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி நிர்வாகி கைது

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி

ஹார்டோ: உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி இயக்குநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரியின் வளாகத்தில் நேற்று நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பின்னர், மாணவி ஒருவரை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்த கல்லூரி இயக்குநர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த மாணவி, சக தோழிகளிடம் நடந்ச சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சக தோழிகளுடன் காவல்நிலையம் சென்ற மாணவி கல்லூரி இயக்குநர் மீது புகார் அளித்தார்.

இதனையடுத்து கல்லூரி இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com