புதுதில்லி: குடியரசுத் தலைவர் பதிவி கட்சி, ஆட்சிக்கும் அப்பாற்பட்டது; அந்த பதவிக்கான பெருமையை காப்பேன் என்று மனுதாக்கல் செய்த பின் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ, மாநில முதல்வர்கள் 20 பேர் முன்னிலையில் இன்று ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை நாடாளுமன்ற தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.
மனுதாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், “நான் ஆளுநர் ஆனது முதல், எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் அல்ல. குடியரசுத் தலைவர் பதவி கட்சி, ஆட்சிக்கும் அப்பாற்பட்டது என்றார்.
மேலும், அரசியல் கடந்த குடியரசுத் தலைவர் பதவியை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பதவி காலத்தில் கட்சி சார்பின்றி செயல்படுவேன்.
உயர் மதிப்புடைய குடியரசுத் தலைவர் மாண்பை காக்கும் வகையில் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் என்னால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுவேன்.
தனக்கு ஆதரவு அளித்துள்ள ஒவ்வொருவருக்கும் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.