அஸ்ஸாமில் வெள்ளம்: 87 ஆயிரம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் நேரிட்டுள்ள மழை வெள்ளத்தினால் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமில் வெள்ளம்: 87 ஆயிரம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் நேரிட்டுள்ள மழை வெள்ளத்தினால் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லக்கிம்பூர், கரீம்கஞ்ச், சோனித்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 131 கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
148 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசால் எடுக்கப்பட்ட புள்ளிவிவர கணக்குப்படி, 3 மாவட்டங்களிலும் 87,500 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக, ரங்காநதியில் வெள்ள நீரில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்
கப்பட்டது.
கடந்த 31-ஆம் தேதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலமே அது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com