திரிபுரா: மார்க்சிஸ்ட் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்: 144 தடை உத்தரவு அமல்

திரிபுரா மாநிலம், பெலோனியா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், 26 பேர் காயமடைந்தனர்.

திரிபுரா மாநிலம், பெலோனியா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், 26 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தெற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோன்சக் இப்பர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
பெலோனியாவை அடுத்த மிர்ஜா பகுதியில் பாஜக தொண்டர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை தங்கள் கட்சியின் கொடிகளை தோரணமாக கட்டிக் கொண்டிருந்தனர்.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் பாஜகவைச் சேர்ந்த 23 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 3 பேரும் காயமடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பெலோனியா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய ரிசர்வ் காவல் படையினரும், மாநில ரைஃபிள்ஸ் படையினரும் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றார் மோன்சக் இப்பர்.
இதனிடையே, மாநில பாஜக துணைத் தலைவர் சுபால் பௌமிக் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பெலோனியாவில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது.
எனவே, "பாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டத்தை' பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com