அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமர்நாத் பனிலிங்க யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 29) துவங்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, உதம்பூர் பஹல்காம் மற்றும் பால்ட்டால் வழிப்பாதையிலான அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

சாலையில் படிந்துள்ள பாறைகளை அகற்றும்பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விரைவில் இப்பகுதியில் யாத்திரை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com